புதிய உதயம் – 7 வது பகுதி.
உயிருக்குயிரான தோழா!
என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ ?
காலம் வென்றுவிட்டதே உன்னை,
உன் உடலில் பலமில்லை,
கண்ணில் காதலில்லை,
மூளையில் பகுத்தறிவில்லை.
நீ உன் பேராசையில்……….
தங்கத்தைத் தேடி நிலத்தை உழுவதில் உன்னை மறந்துவிட்டாய்,
கண்ணை விற்று ஓவியம் வாங்கி என்ன பயன் ?
எனக்கு நெருக்கமான நெஞ்சங்களே !
புதையலைத் தேடி பூமியை மேலும் மேலும் காயப்படுத்தாதீர்கள்,
அது உனக்குள் புதைந்திருக்கிறது !
இந்த போராட்ட பூமியை விட்டு சிறிது விலகு,
கண்ணை மூடி தளர்வாய் அமரு,
இதயத்தின் முணுமுணுப்பு கேட்கிறதா?
உன்னை முழுதாய் சேகரித்துக்கொண்டு அந்தக் குரலின்
பின்னே போ,
உடனே நீ சொர்க்கத்திலிருப்பாய் !
மலர்கள் உன்னை மலர வைக்கும்,
மரம் காற்றோடு சேர்ந்து சிரிப்பூட்டும்,
புல்லும் உன்னிடம் சேதி சொல்லும்,
விலங்குகள் விளையாட அழைக்கும்,
நீ மகிழ்ச்சியின் அதிகச்சுமை தாங்காமல் ஆனந்தக்கூத்தில்
அன்பைப் பொழிவாய் !
நீ கொடுத்த கணமே, அது பலகோடி மடங்காய்
திரும்பப் பிறக்கும் !
இதுதான் வாழ்வுக் கணக்கு !
ஓ ! கணக்கில் அடங்கிவிட்ட என் நண்பனே !
இறந்தவைகளை எண்ணுவதை நிறுத்து !
உயிருள்ள ஒரு விதை ஒருகோடி மரங்களைப் படைக்கும்!
இதுதான் வாழ்க்கைக் கணக்கு !
வா, சேர்ந்து ஆடுவோம்,!
அன்பை, நேசத்தை, அமரத்துவத்தை ஆனந்திப்போம்!!
சூரிய ஒளி தழுவும் சிகரங்களில் நாம் சேர்ந்து அமர்வோம்!
இருண்ட பொந்துகளில் அல்ல,
ஒவ்வொரு இரவும் வெவ்வேறு நிலவின் அடியில்
விருந்துண்போம் !
………….. தொடர்ச்சி அடுத்த மாதம்