வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தமிழ்நாட்டு ஓஷோ நிகழ்ச்சிகள்

ஓஷோ சாஸ்வதம்

மார்ச்சில் நடந்தவை

மார்ச் 21 – ஓஷோ ஞானமடைந்த
தினக் கொண்டாட்டம் மேஜிக் ஷோ. நாடகம், நடனம், பாட்டு என்று ஆனந்தமாக நடந்தது.

தியானச் செய்தி

தியான தரிசனம் கொள்ள விரும்பும் அன்பர்கள் முன்கூட்டியே தொடர்பு கொண்டு தகவல் கூறிவிட்டு வாருங்கள்.
குறைந்தது 2 நாட்கள் தங்கும்படி வாருங்கள்.

கட்டணம் ஒரு நாளைக்கு 500

கலந்துகொள்ள அன்பர்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறார்கள்.

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – நடப்புக்கணக்கு, ஓஷோ சாஸ்வதம்,  யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கணக்கு எண் – 722701010050011.
IFSC No. UBIN0572276

விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு
கொள்ளவும் :  9789482630 / 9894982630

திருச்சி ஓஷோ ரிசார்ட் நிகழ்ச்சிகள்

ஏப்ரல் 10,11,12 மூன்று
நாள் தியான முகாம் நடைபெறுகிறது.

ஏப்ரல் 9 முதல் 15 முடிய
ஏழு நாள் நோ மைன்ட் தியான தெரபி நடைபெறுகிறது.

கலந்து கொள்பவர்கள் முன்தின மாலையே வந்துவிட வேண்டும்.

கட்டணம் ரூ.1500 மற்றும் ரூ.3500

விவரங்களுக்கு – சுவாமி மோகன் பாரதி – 9443424065

ஓஷோ சாஸ்வதம் புத்தக வெளியீடு

நமது தலையங்கங்களின் தொகுப்பு – 48 தலையங்கங்கள் – ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் (ஓஷோ எனும் புதிய மனிதனைப் பற்றி) – என்ற
புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும்.
கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.

ஓஷோ கோ-சுவான் முதல்நிலைப் பள்ளி

ஓஷோவின் பிறந்த நாளான டிசம்பர் 11, 2014-ல் ஆரம்பித்த பள்ளி அழகுநடை பயில்கிறது. 2 குழந்தைகள் 5 ஆகி விட்டனர். குழந்தைகளும், கற்றுக் கொடுப்பவர்களும் ஒருசேர கற்கிறார்கள். புதிய
மனிதனுக்கான சரியான ஆரம்பம் இது.

பள்ளி சென்ற குழந்தைகள் கொத்தடிமைச் சிறை மீண்ட கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இதைப் பார்த்து நமக்கு ஏற்படும் நிறைவு மிகுந்த சக்தியைக் கொடுக்கிறது. அனைவருக்கும் நன்றி.