ஓஷோ சாஸ்வதம் செய்தி
1. ஓஷோ சாஸ்வதத்தில் செப்டம்பர் மாத தியானப்பட்டறைகள் சிறப்பாக நடைபெற்றன.
2. ஓஷோ சாஸ்வதத்தில் அக்டோபர் மாதம் ஜோர்புத்தா தியானப்பட்டறை நிகழ்ச்சிகள் இல்லை. நவம்பர் மாதம் 16,17,18 – வெள்ளி, சனி, ஞாயிறு – 3 நாள் ஜோர்புத்தா தியானப்பட்டறை நடைபெறும். முதல் முறையாக 40 பேர் கலந்துகொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்த தியானக் கொண்டாட்டத்திற்கு ஓஷோ அன்பர்கள் தங்கள் துணையுடனும், நண்பர்களுடனும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். தயவுசெய்து உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளவும்.
15-ம் தேதி மாலையே வந்துவிட வேண்டும். அதிக நபர்கள் கலந்துகொள்ளும் தியானப்பட்டறை என்பதால் குழந்தைகளைக் கூட்டிவர வேண்டாம்.
மூன்று நாளும் வழக்கமான தியானங்களைத்தவிர புதுபுது தியானங்கள் நடைபெற உள்ளன.
உணவு உறைவிடம் உட்படக்கட்டணம் 2000/=. கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – சேமிப்புக்கணக்கு, ஆனந்தராகுல், பாரத ஸ்டேட் வங்கி, ஊத்துக்குளி ரோடு,, திருப்பூர் – எண்– 30883166172. IFSC No.: SBIN0000935. கட்டணம் செலுத்திவிட்டு எஸ்எம்எஸ் செய்யவும்.
விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் : 9789482630 , 9894982630
3. மேலும் விரைவில்
ஓஷோ விபாசனா 7 தினங்கள்
ஓஷோவின் – மனத்தைக் கடத்தல் 7 தினங்கள்
ஓஷோவின் – மனம் கடந்த அழகு ரோஜா 21 தினங்கள்
ஓஷோவின் – இயல்புக்குத் திரும்ப உதவும் சுய வசியப் பயிற்சி 7 தினங்கள் ஆகியவை நடைபெற உள்ளன.
10 நபர்கள் சேர்ந்தவுடன் தேதி அறிவிக்கப்படும்.
விருப்பமுள்ள ஓஷோ அன்பர்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பல அன்பர்கள் தொடர்பு கொண்டார்கள். ஆனால் இப்போது எனக்கு நினைவில்லை.
ஆகவே தயவுசெய்து தாங்கள் கலந்துகொள்ள விரும்பும் தியான பயிற்சியையும், பெயரையும் எஸ்எம்எஸ் அல்லது ஈ-மெயில் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
4. ஒரு மாதம் தங்கி தியானமும், கம்யூன் வாழ்க்கை அனுபவமும் பெற விரும்பும் ஓஷோ நண்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள். கட்டணம் உணவு , உறைவிடம் உட்பட ரூ.8000 ஒரு மாதத்திற்கு.