புதிய உதயம் – 5 வது பகுதி.
உயிர் நண்பர்களே !
பலமுறை உங்கள் கூக்குரலையும் கோபத்தையும்
நான் கேட்கிறேன்,
“ டேய், அசிங்கம் பிடித்த மோசக்காரா,
எது எப்படி ஆனாலும் நீ மட்டும் அன்புசூழ்ந்து அன்பில் மூழ்கி
இருக்க வேண்டுமா ?
வெளியே வா ! எங்களைப்பார் !
எங்கள் போராட்டத்திற்கு கைகொடு,
இதுதான் உண்மை அன்பு என்கிறீர்கள்.
ஆனால் எனக்குப் பிரியமானவர்களே !
எப்படி எறும்புகள் மலையை இழுக்கமுடியும் ?
இது எண்ணிக்கையின் குற்றமல்ல,
அது ஆதரவில்லாததன் குறைபாடல்ல,
இது ஆற்றலில்லாததன் தோல்வியல்ல,
நீங்கள் மலையைப் பிடித்து உங்கள் பொந்துக்களில்
அடைத்துக்கொள்ள முடியாது .
வா நண்பா ! வெளியே !
உங்கள் அன்புச் சிறகுகளை விரியுங்கள்,
பின்பு தெரியும்……….
ஒரு மலைக்குப் போராடும் சிறுமை இனியில்லை,
சிறகுகளுக்கு சிகரங்கள் சொந்தம்
பறக்கும் உனக்கு இனி பாரினில் ஏது எல்லை ?
வா, சேர்ந்து பறப்போம் !
இந்த அண்டத்தின் சிகரங்களையெல்லாம் அனுபவித்தறிவோம் !
…………….தொடர்ச்சி அடுத்த இதழில்